கழகம் - அண்மை செய்திகள்

அண்மை செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருந்தலைவர் காமராஜரின் சிலை அவமதிக்கப்பட்டு இருப்பதற்கு

சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத் – தலைவர்

எர்ணாவூர் நாராயணன் கண்டனம்

பெருந்தலைவர் காமராஜர் நாடு விடுதலைக்காக ஒன்பது ஆண்டுகாலம் சிறையில் இருந்தவர், நாடு நலம் பெற 9 ஆண்டுகாலம் தமிழகத்தில் நல்லாட்சி புரிந்தவர், பல அணைகளை கட்டியவர், தொழில் புரட்சிகளை மேற்கொண்டவர், குலக்கல்வி திட்டத்தை இழுத்து மூடியது உடன் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் படிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து இடங்களிலும் பள்ளிகள் திறந்தவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். அனைத்து மதத்தை சேர்ந்த மக்கள் பாராட்டக்கூடிய தலைவரின் சிலையை அவமதித்த வரை கைது செய்வது மட்டுமல்லாமல் அவருக்கு தூண்டுகோலாக இருந்தவர்களையும் கைது செய்ய வேண்டும்

காவல்துறை கைது செய்துள்ள நபரை சிறையில் அடைப்பது மட்டுமல்லாமல் அவர் மீது குண்டாஸ் வழக்கு பதிந்து இனி எந்த ஒரு நபரும் தலைவரின் சிலைகளை அவமதிக்க படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

நாட்டில் பல்வேறு அரசியல் காட்சிகள் இருந்தாலும், மக்களுக்கு தேவையான நன்மை, தீமைகளை எடுத்துரைப்பதற்கும், அவர்களுக்கு தேவைப்படுகிண்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கு, ஒரு கருவியாக ஊக்குவிப்பதற்கும், சிறப்பாக ஆளுகின்ற அரசுக்கு கோரிக்கைகளை கொண்டு சென்று பாடுபடுகின்ற இயக்கம் தான் இந்த சமத்துவ மக்கள் கழகம்

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாமை குறைந்து, விவசாயம் மேம்பாட்டு ஏழை, எளியோர் வாழ்வில் வசந்தம் வீச பாடுபடுகின்ற இயக்கம் தான் இந்த சமத்துவ மக்கள் கழகம்

சாதாரண அடிப்படை குடும்பபத்தில் பிறந்த நான், ஒரு வேலைத் தேடி வந்த நான், ஒவ்வொரு கடைகளிலும் செய்தித்தாள் எடுத்து சென்று போடுகின்ற சிறிய வாழ்க்கை தொடங்கி, அந்த காலம் தொட்டு இறைக்கு இறைவனுடைய ஆசியால், தமிழக மக்களின் அன்பால் ஆதரவால் ஒரு உயர்ந்த இடத்தை அடைந்திருக்கிறேன்.

சாதாரண ஏழை, எளியவர்கள் முதற்கொண்டு நடுத்தர மக்கள், தொழில் அதிபர்கள், சிறு தொழில் அதிபர்கள் என எல்லோருடைய தேவை என்ன, அவைகளுடைய பிரச்சனை என்ன, அந்த பிரச்சனை எப்படி தீர்வு காண்பது என்று அனுபவ ரீதியாக நான் பார்த்துவந்துள்ளேன்.

சமத்துவ மக்கள் கழகம்
என்னுடைய அனுபவத்தின் அடிப்படையிலேயே சரத்குமார் அவர்கள் ச.ம.க கட்சி துவங்கும் பொது கட்சில் எனக்கு, அவருக்கு அடுத்த படியான துணைத்தலைவர் பதவி கொடுத்து, அந்த பொறுப்பில் என்னை பணியாற்ற செய்தார். துணைத்தலைவருக்கு அடுத்த பதவி என்று சொன்னால் அது தலைவர் பதவி தான். சரத்குமார் நன்றாக வாழவேண்டும், வளர வேண்டும் அவர் கட்சி மூலம் இந்த தமிழக மக்களுக்கு எதாவது செய்ய முடியும் என்ற எண்ணத்தில் தான் அவருக்கு அடுத்த படியான இந்த பொறுப்பில் பணியாற்றி வந்தேன். அந்த காலகட்டத்தில் ஒரூ சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பணியாற்றி, என்னை தேர்தெடுத்த மக்களுக்கு சிறந்த பணியாற்றி, நம்மை சட்டமன்ற உறுப்பினர்களாக்கிய அணைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒரு நேர்மையாகவும், அவர்களை நேர்மையாக வழிகாட்டுதலாக கொண்டு அவர்ககளுக்கு கீழ் செயல்பட்டு வந்தோம். திடீரென்று இந்த தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட இந்த முயற்சிகள் தவறானது என்பதன்னை புரிந்துக் கொண்டு, நானே இந்த இயக்கத்தில் இருந்து வெளியே வருகின்ற சூழ்நிலையில், வேறு சூழ்நிலை உருவாக்கிவிட்டது,

அந்த கட்சியில் இருக்கிற வரை எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் கட்சி நிர்வாகிகள் அவர் அவர் போக்கிற்கு செயல்படுகின்ற காரணத்தினால் தான் அந்த கட்சி தற்போது இந்த நிலைக்கு வந்துள்ளது.

அப்போது நான் எடுத்து வந்த நோக்கம் இந்த தமிழக மக்களுக்கு நான் எதாவது செய்தாக வேண்டும் என்ற நோக்கம் அங்கே தடைபட்டு போய்விட்டது. எந்த நோக்கத்திற்கு ஒரு வணிகர் சமுதாயத்தினர் 25 ஆண்டுகளாக எந்த வணிக சமுதாய மக்களுக்கு, ஏழை, எளிய மக்களுக்கு, மீனவ கிராம மக்களுக்கு நான் தொண்டாற்றி வந்தேனோ, அவர்களுக்கு எந்நாளும் உதவி செய்து வந்தேனோ அதனை எல்லாம் தொடர்ந்து செய்ய முடியாத நிலை நான் அரசியலில் இருந்து வெளியேற ஏற்பட்டு விடும் என்ற நோக்கத்தோடு இந்த சமத்துவ கழகத்தை தொடங்கி இருக்கின்றோம். மேலும் தமிழக மக்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டு அனைத்து சமுதாய பல்வேறு தரப்பினர்களுக்கு பயனாக அந்த செயல்களுக்கு ஒரு வடிவம் வேண்டும், அந்த செயல்பாடுகளுக்கும் ஒரு அமைப்பு வேண்டும் அந்த அமைப்பின் மூலமாக தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்ற எண்ணத்தில் தான் இந்த சமத்துவ மக்கள் கழகம் இயங்கி வருகின்றது.

இந்த கட்சி அமைப்பின் மூலம் 234 தொகுதிகளிலும் மக்கள் ஆதரவை பெற்றுள்ள நாம், புதிதாக நிர்வாகிகள் நியமித்துள்ளோம். முதற்கட்டமாக 42 மாவட்டங்களுக்கு, மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் நியமித்துள்ளோம். இது தவிர பல்வேறு நகர, தொகுதி, பகுதி, வட்ட அணிகளின் நிர்வாகிகள் நியமிக்கபட்டுள்ளன.